search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரையில் கொள்ளை"

    மதுரையில் நகைக்கடை உரிமையாளர் வீட்டில் புகுந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான தங்கம்-வெள்ளிகளை திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை கரிமேடு பாரதியார் ரோட்டைச் சேர்ந்தவர் சங்கரன் (வயது59). இவர் கான்சாமேட்டு தெருவில் நகைக்கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று சங்கரன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் பீரோவை உடைத்த அவர்கள் அதில் இருந்த 15 பவுன் தங்க கட்டி, 15 கிலோ வெள்ளி ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர்.

    ஊர் திரும்பிய சங்கரன் கதவு உடைக்கப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி திருட்டுபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருட்டுப்போன தங்கம் -வெள்ளியின் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.
    மதுரையில் வங்கி அதிகாரி வீட்டில் 22 பவுன் நகையை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை தபால் தந்தி நகரில் உள்ள மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் சுந்தர்ராமன் (வயது 65). இவர் அரசு வங்கியில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சீனிவாசன் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    வீடு பூட்டியிருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சம்பவத்தன்று நள்ளிரவு அங்கு வந்து கதவை உடைத்தனர். பின்னர் உள்ளே சென்ற அவர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 22 பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பினர்.

    ஊர் திரும்பிய சுந்தர் ராமன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது நகை திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

    இது குறித்து அவர் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
    ×